Showing posts with label கற்பனைக் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கற்பனைக் கிறுக்கல்கள். Show all posts

Friday, October 14, 2011

மௌனப் பேச்சு











சிந்தனை நியூரான்கள் பெற்றெடுத்த
டெசிபல் அற்ற குழந்தை!


Tuesday, October 04, 2011

பிறந்தது கவிதை!

நட்சத்திரத்துக்கு ரெக்கை முளைத்தது
பிறந்தது மின்மினிப் பூச்சி!

அன்னையின் அன்பு போதையில்
தள்ளாடியது தொட்டில் - மழலைக்கு
பிறந்தது தூக்கம்!

மனம் கொள்ளை
பிறந்தது காதல்!

மணல் கொள்ளை
பிறந்தது பாலைவனம்!

அரிதாரம் பூசப்பட்டது சிந்தனைக்கு
பிறந்தது கவிதை! 


Thursday, September 29, 2011

குறட்டை



உறக்கம் ஊருக்கே
உரக்க அடித்த
சுய தம்பட்டம்!

Friday, September 16, 2011

ஓ விவசாயியே!


ஓ விவசாயியே!
உன் தேகத்தின் கருமை - துடைத்திடும் என் தேசத்தின் வறுமை!
உழைப்பின் மீது நீ கொண்ட பாசம் - என் தேசத்தின் சுவாசம்!
உன் கால் சேற்றில் - என் கை சோற்றில்!

கர்ணன் பிறந்த  இவ்வுலகில், உனக்கு
மண்புழுக்கள் மட்டுமே நட்பாகிப் போன அவலம் தான் என்ன?
துரத்துவான் உன்னை  முதலாளிப் பேய்
ஆகிவிடாதே நீ பகடைக் காய்!

 நிலத்தில் நெல்லையும், நெஞ்சில் 'தில்'லையும் பயிர் செய்!  
அப்பயிர் உனக்கு  உயிர் செய்யும்!
மனதில் 'தில்'லை வளர். அது தில்லைக்கு நிகர்!
பட்டுப்போவது மரம் மட்டுமே! மறம் அன்று!


வானம் பொய்த்தினும் பொய்யாது வள்ளுவன் வாக்கு
- "உழுவார் உலகத்தார்க்கு ஆணி"
 உழுதுண்டு வாழ்பவனே!  வாழிய உன் வைராக்கியம்!

Thursday, September 08, 2011

அவள் நிலவு!

















தேய்பிறை கொண்ட அவள் - நிலவு..
பகலினில் வாராத அவள் - நிலவு...
களங்கம் சேர்த்த அவள் - நிலவு....
என்னோடு சேர்ந்த அவள் - நிலவு!